கானல் காட்சி!!


           


        அழகான பாம்பன் பாலம் அருகேஓர் ஓவியம் நீரில் கரைந்து கொண்டு இருந்தது.  கண்கள் பார்த்து வியந்துகொண்டிருக்கும் போது கலை ஆர்வத்தின் ஆரம்ப பாடத்தில் பயின்று கொண்டிருந்த புகைப்படக் கருவியில் படம் பிடித்தேன் அந்த ஓவியத்தை!




             
                  எண்ணங்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது என்பதற்கு இந்த சிறுமியின் , எண்ணங்களே சாட்சியாக எனக்குள் சாட்சியளித்துக்கொண்டிருந்த காலை வேளையில்…. ராமேஸ்வரம் மீனவர்கள் பகுதியின் ஒரு பிரச்சனைக்கான படப்பிடிப்பில் குழுவோடு இருந்தபோது!!





            யிரத்தெட்டு பிரச்சனைகளை கண்ணீரில் கரைத்து கடலில் கலக்க விட்ட போதும் கலங்காமல் எங்களை உபசரித்தவிதமும் பழகிய விதமும் பாலைவனத்திற்குள் பூத்திடும் சோலைவனமாக்கியது.





                      ந்த கணத்தில் கனத்த மனம் கொண்ட கதைகளை கேட்டுக்கொண்டிருந்த போது,  அழகான பாம்பன் பாலம் அருகேஓர் ஓவியம் நீரில் கரைந்து கொண்டு இருந்தது.

                                                                           தங்க.சித்திரன்

Post a Comment

0 Comments