நமது தேசியகீதத்தின் தமிழாக்கம்!





         ரவீந்தரநாத் தாகூர்  வங்காள மொழியில் எழுதிய ‘ஜன கண மன’ என்ற பாடலின் இந்தி வடிவம் தான், நம் தேசிய கீதமாக 1950-ம் ஆண்டு ஜனவரி 21-ம் ஆண்டில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது தேசிய கீதத்தின் தமிழாக்கம் தான் தற்போது பார்க்கப்போகிறோம்.

”ஜன கண மண அதிநாயக ஜய ஹே

    பாரத பாக்ய விதாதா

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா

    திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா

     உச்சல ஐலதி தரங்கா

தவ சுப நாமே ஜாகே

தவ சுப ஆசிஸ மாகே

காஹே தவ ஜய காதா

'ஜன கண மங்கள தாயக ஜய ஹே

    பாரத பாக்ய விதாதா

ஜய ஹே ஜய ஹே ஜய ஹே

ஜய ஜய ஜய ஜய ஹே”



தமிழாக்கம்:



இந்தியத் தாயே! மக்களின் இன்ப தும்பங்களைக் கணிக்கின்ற

    நீயே எல்லாருடைய மனதிலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும் சிந்துவையும் கூர்ச்சரத்தையும்

   மராட்டியத்தையும் திராவிடத்தையும் ஒடிசாவையும்

வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர், விந்திய, இமயமலைத்  தொடர்களில்

       எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

               வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றது.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு

            வெற்றி!       வெற்றி!          வெற்றி



இது போன்ற சுவாரசியமான தகவலை காண,











Post a Comment

0 Comments