”நான்
கேட்டதும் மழை இன்றே வர
வேண்டும்!
முள்ளில் விழுந்த பனிதுளிகள்; முத்துபோன்று
காட்சியாளிகிறது.
சாலை ஓரம் பேருந்தின் சன்னல் ஓரம் ”
நல்ல நிலவு தூங்கும்
நேரம். என் மனம் அலைத்து தேடும் தூரம். பக்கம் யாரும் இல்லை சிறு துக்கம் மட்டும் தான்
கண்களுக்கு சொந்தம். மெல்ல மெல்ல மனம் தகர்கின்றது
மனம் அல்ல பேருந்துயும் சன்னல் ஓரம் உடைய தென்றலும். மலை நேரம் சிறு தயக்கம் வானில்
முகில்களுக்கு போர் யார் விண்ணைதாண்டி மண்ணில் செல்வது என்று விதியின் கட்டளை மண்ணின்
மடிந்தது மழை துளிகள் . மண்ணின் வாசம் மண்வாசனை மனத்தில் எங்கும் மகிழ்ச்சியை தந்தது.
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள அழகிய தொடர்பை அந்த தூய உறவை வானவில் அழகாய் வளைத்தது.
பூக்களும் பூத்து குலுங்கியது. தேவையின் தேடல் மலை பொழுது அறியும் மல்லி,முல்லை மலர்கள்
மலர்கையில்.
மழையின் சத்தம் என் இதழ்கள்
உலறிய கவிதைகள்…..
செம்மழை துளிகள் இம்மண்ணில் படர்ந்து பூக்கின்றது…
நெஞ்சில் குடிகொண்டது என்????...
வானம் பார்த்த
பூமி போல் என் மனமும்
வடிக்கிறது உன் வருகைகாக வருண பகவனே…
சிற்பம் சேதிக்கியது
யரோ, இந்த கருமுகில்களுக்கு
அணையிட்டது யரோ????
சட சடவென வானம்
வெளுத்து வாங்குகிறது யானோம்…
பறவைகள் போன்று மெகம் பறக்கின்றது
பாவி மனம் அலைபாயுகிறது
எங்கே நீ என்று
இப்பாவையே தொட வரவயோ மழையே…..
உன் வருகைக்கு
மயில்கள் நடனம் ஆடும்…மான்கள் துள்ளி துள்ளி ஓடும்…
வானவில் தோரணம்
கட்டும்…. இவை அனைத்தும் நம்மை சேர்வற்காகவா
மழையே!!!!!!!!!!!
- இப்படிக்கு செங்காந்தள்
0 Comments