நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று இருப்போம். அங்கு கடவுளுக்கு பூஜை செய்யும் போது மணி அடிக்கும் பழக்கம் இருகிறது. ஏன் நமது இல்லங்களில் கூட சாமிக்கு பூஜை செய்யும் போது மணி அடிக்கும் பழக்கம் இருகின்றது. இப்படி கோவில்களிலும், இல்லங்களிலும் மணி ஏன் அடிக்கப்படுகின்றது என்று தெரியுமா! வாங்க அது ஏன்? என்பதை நாம் பார்க்கலாம்.
நாம் பூஜைகளுக்கு பயன்படுத்தும் கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படும் மணி அல்ல. குறிப்பாக பூஜைகளுக்கு பயன்படுத்தும் மணிகள் இரும்பு, குரோமியம், நிக்கல், துத்தநாகம்,காப்பர், மாங்கனீஸ், காட்மியம் போன்ற பல உலோக கலவையினால் தயாரிக்கப்படுபவை தான் கோவில் மணிகள்.
இந்த உலோலகலவையில் சரியான அளவில் கலந்து தயாரிக்கப்படுகின்றது. இப்படி பார்த்து பார்த்து செய்யும் இந்த கோவில் மணிகளை ஒரு முறை அடிக்கும் போது அதன் ஓசை சுமார் 7 நோடிகள் வரை நீடிக்கும்.
பூஜை மணிகள் பொதுவாக இந்து கோவில்களில் அதிகமாக பயன்படுத்துவது உண்டு அதற்கு காரணம், கோவில் மணியினால் எழும் ஓசை இந்துகளின் பிரணவ மந்திரமான ”ஓம்” என்ற ஒலியினை எழுப்புகின்றன. இந்த காரணத்தினால் தான் இந்து கோவில்களில் பூசைகளின் போது மணி அடித்து கடவுகளுக்கு பூசை செய்கிறனர்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி? (HOW TO INCREASE POSITIVE ENERGY IN OUR HOUSE)
இந்து மதம் உருவான வரலாறு?
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?
0 Comments