கொரோனாவிற்கு மூலிகை மருந்து தயார்! மருந்தை குடித்து காட்டிய மடகாஸ்கர் அதிபர்


             உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கு பல ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில், மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா கொரோனாவிற்கு மூலிகை மருந்து தயாரித்து குடித்தும் காட்டியுள்ளார். இந்த செய்தியினை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கோரதாண்டம் ஆடி கொண்டு இருக்கும் கொரோனாவின் ஆட்டத்தை நிறுத்த பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்தியாவும் ஆங்கிலம் மருத்துவம் முதல்  இயற்கை நமது நாட்டின் பாரம்பரியமான சித்த, ஆயுர்வேத மருந்துகள் மூலம் இந்நோயை வராமல் தடுப்பற்கான எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/SE_Rajoelina/status/1255790494375952390

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மடகாஸ்கர் நாட்டில் பல ஆராய்ச்சி செய்து வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றுக்கு  மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தகுறித்து  அதிபர் அவர்கள் தனது  டுவிட்டர் பக்கத்தில், மடகாஸ்கர் தீவுகளில் காணப்படும் ஆர்டிமீசியா என்ற தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. அந்தமருந்து கொரோனா நோயையும் அழிக்கும் திறன் பெற்றுள்ளது என்றும்,  இந்த புதிய மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும், மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


 நேற்று மடகாஸ்கர்  தலைநகர் அந்தனநாரியோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றி விளக்கிய  அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரோ, புதிய மருந்தை அனைவரும் முன் நின்று  குடித்தும் காண்பித்தார்மடகாஸ்கர் நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதுமட்டுமின்றி அங்கு தற்போது வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

பல நாட்டவரும் மருந்துகள் தயாரித்த வண்ணம் இருந்தாலும், WHO – அமைப்பு   எந்தவொரு மருந்துகளுடனும் சுய மருந்துகளையும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,




எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?






Post a Comment

0 Comments