விவசாயிகளுக்கு நற்செய்து! இனி விலையில்லாமல் களிமண் உட்பட்ட மண்வகைகளை பெறலாம்!



தமிழக பொதுப்பணித்துறை  விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் களிமண், வண்டல்மண், சவுடுமண், சரளைமண்களை விவசாயிகள் விலையில்லாமல் பெறலாம் என அறிவித்துள்ளது. மண்பாண்டங்கள் செய்பவர்களும் நீர்நிலைகளில் உள்ள மண்களை விலையில்லாமல் பெறலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் இருக்கும் களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு  அறிவித்துள்ளது.

 

பொதுப் பணித்துறை வெளியிட்ட அறிக்கை:


கடந்த 2017-ம் ஆண்டு குடிமராமத்து திட்டம்தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர் வாரி அவற்றின் கொள்ளளவினை மீட்டெடுக்க  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால்  இத்திட்டம் தொடங்கப்பட்டது.


இந்த திட்டத்தின் மூலம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில், பருவ மழையின்போது வழக்கத்தை விட நீர் அதிகம் தேக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் பெருமளவில் பயன்படுகின்றது. இந்த நீர்  நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்களுக்கு வழங்கும் பொருட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அரசாணை எண்.50, தொழில்துறைநாள் 27.04.2017 அன்று வெளியிடப்பட்டதுஇத்திட்டத்தின் மூலம், இதுவரை 6,69,900 விவசாயிகளும், மட்பாண்ட தொழில் புரிவோரும் பயன் பெற்றுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கிலிருந்து விவசாய பணிகளுக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

கோடை காலத்தில் பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பதால், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விலையில்லாமல் தங்கள் கிராமத்தில் அல்லது அருகில் இருக்கும்  கிராமத்தில் உள்ள ஏரிகள் , குளங்களிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,




எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?







Post a Comment

0 Comments