ராவணன் சீதையை ஒளித்த வைத்த ”ராவண குகை” இவ்வளவு வசிதிகளை கொண்டவையா?






              ராமாயணத்தில் சீதை கண்ட ராவணன் சீதையை கடத்தி  இலங்கைக்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு குகையில் ஒளித்து வைத்தான் அந்த குகையினை அனைவரும் ”ராவண குகை” என்றுதான் தற்பொது அழைக்கப்படுகின்றது. அந்த ராவண குகை எப்படி பட்டது? அங்கு என்ன எல்லாம் வசதிகள் சீதைக்கு இருந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்தியாவின் புராண கதைகளில் முக்கிய கதைகளில் ராமாயணமும் ஒன்று. ராமாயணம் குறித்த பல சுவாடிகள் விஞ்ஞானிகளை வியக்க வைகின்றது. ஏன்னென்றால், ராமாயணம் கதைக்கு பல உண்மைக்கான சன்றுகள் பல உள்ளன. அதில் ஒன்று தான் இந்த ராவணம் குகை.

ராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் சென்று விடுவார்கள். அப்போது ராவணன் சீதையின் மீது ஆசை கொண்டு ராமனின் மனைவியை சீதையை இலங்கைக்கு கடத்தி வந்துவிட்டான். அப்போது சீதையை எங்கு ஒளித்து வைக்க என்று தேடிய ராவணன் ஒரு குகையினை தேடி பிடித்தான் அந்த குகைதான் ராவண குகை. அன்றில் இருந்து அது ராவண குகை என்று அழைக்கப்படுகின்றது.


இலங்கையில் ராவண குகை எங்கு உள்ளது?





ராவண குகை தற்போது இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் பண்டாரவளையில் அமைந்துள்ளது. அங்கு இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லே நகரத்தின் மத்தியிலிருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையில்தான் ராவண குகை அமைந்திருக்கின்றது.

பிரசிதிப்பெற்ற இந்த இராவணன் குகை சுமார்  50 அடி அகலமும், 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்ட பெரிய பெரிய பாறை கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து  இந்த குகை சுமார் 4490 (1,370 மீட்டர் )அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டடக்கலையில் சிறந்து விளங்கிய ராவணன்:



ராமாயண புரணத்தில் வேண்டுமானலும் ராவணனை தவறாக காட்டி இருக்கலாம், ஆனால் நிஜத்தில் ராணவன் என்பவன் மிகுந்த சக்தி வாய்ந்த அரசன். இலங்கையில் இன்றும் ராவணனை தான் கடவுளாக பூஜிக்கப்படுகிறது.
ராவண குகையில் அமைந்துள்ள சுரங்கங்கள் கட்டடக்கலை அவனின் திறனை நிரூபிக்கின்றது.  தற்போது அந்த சுரங்கங்கள் மலைகள் வழியாக விரைவான போக்குவரத்து வழிமுறையாகவும், ஒரு  இரகசிய வழிப்பாதையாகவும் செயல்பட்டு வருகின்றது.



இராவணா நீர்வீழ்ச்சி:



ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில்  ஒரு அழகிய நீர்வீழ்ச்சி  ஒன்று அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி இராவணா நீர்வீழ்ச்சி என்று இலங்கை மக்கள் அழைக்கிறார்கள். இந்த நீர்வீழ்ச்சி எல்லை வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும்.


இந்த நீர்வீழ்ச்சி 3  படிநிலைகளில் பாய்கிறது. இதில் மிக முக்கிய பாய்ச்சல் ஒன்பது  மீட்டர் மட்டுமே ஆகும். நீ ர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அரிப்பு துரிதமாக இந்த இடத்தில் நடைபெறுகின்றது.


இராமாயணத்தோடு தொடர்புடைய இராவணன் நீர் வீழ்ச்சி:




இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக இலங்கை மக்களிடையே  நம்பப்படுகிறது.  இந்த நீர்வீழ்ச்சிக்கு பின்னால்தான் குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பிரசிதிப்பெற்ற  ராவண குகையை பார்க்க இந்தியாவிலிருந்தும் மட்டும் அல்லாமல் வெளி நாடுகளிலிருந்தும்  பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். வரலாற்று மதிப்பைக் கொண்ட இந்த குகை இலங்கையில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,















Post a Comment

0 Comments