கற்றாழையை இப்படி உபயோகித்துப் பாருங்கள்! உங்கள் முகம் பொலிவுடன் ஜோலிக்கும்!





      கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பழமொழி உண்டு.  அப்படி பட்ட முகத்தை நாம் முறையாக பாரமரித்தால் மட்டுமே நமது முகம் என்றும் பொலுவுடன் இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள்  இருவரும்  தங்களின் அழகைக்  காட்டிக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.   அதற்காக அழகுநிலையங்களுக்கு சென்று பணத்தை வீண்ணடிக்காமல் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நம் முகத்தை பாரமரிக்கலாம்.


கற்றாழைக்கு உள்ள குணங்கள்:

  • நமது முகத்தில் இருக்கும் மாசுக்களை நீக்கக்கூடிய சக்தியானது கற்றாழைக்கு உள்ளது.


  • இயற்கையாகவே  கற்றாழைக்கு முகம் மாநிறமாக இருந்தாலும், அதை வெள்ளையாக மாற்றும் சக்தி உள்ளது.


  • கரும்புள்ளிகளை நீக்கும் சக்தி  கற்றாழைக்கு உள்ளது.


  • கழுத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கும் சக்தியும் கற்றாழைக்கு உள்ளது.


  • கற்றாழையில் இருக்கும் வைட்டமின் C, வைட்டமின் E, நம் முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்களை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


கற்றாழையை இப்படி உபயோகித்து பாருங்கள்! உங்கள் முகம் பொலிவுடன் ஜோலிக்கும்:

  • முகத்தை அழகாக மாற்றுவதற்கு கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லும், நம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரையும் மட்டுமே போதும்.


  • முதலில் உங்களது முகத்தை சாதாரண தண்ணீரில், சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.


  • பின்னர் கற்றாழை செடியிலிருந்து, சிறிய துண்டாக  கற்றாழையை உடைத்து எடுத்து, அதில் இருக்கும் தோலை மட்டும் நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லில் சிறிதளவு சர்க்கரை தொட்டு உங்களது முகத்தில் லேசாக ஸ்கிரப் செய்ய வேண்டும்.


  • அழுத்தமாகப் செய்து விடக்கூடாது. சர்க்கரையின் மூலம் முகத்தில் கீரல் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. வெறும் 3 நிமிடம் மட்டும் உங்கள் கைகளை வைத்து லேசாக ஸ்கரப் செய்தால் போதும்.


  • அதன் பிறகு  உங்கள் முகத்தில் இருக்கும் ஜெல்லை, 10 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் லேசாக தேய்த்து முகத்தை கழுவி விடுங்கள்.


  • இதனை செய்து முடித்த பின்னர், உங்கள் முகம் மீண்டும் பொலிவு பெற இயற்கை முறையில் பேக் போடவேண்டும். அதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:

  1. முல்தானி மெட்டி
  2. தக்காளி பழச்சாறு
  3. காய்ச்சாத பசும்பால் (பசும்பால் கிடைக்காதவர்கள் சாதாரண பேக்கட் பாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.)

செய்முறை:

  •  வீட்டில் இருக்கும் ஒரு சிறிய பாத்திரத்தில் 2 தேக்கரண்டி முல்தானி மெட்டி தூள், 2 ஸ்பூன் தக்காளி பழச்சாறு, கலவையை கலக்க தேவையான பால் இவை மூன்றையும் பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.  பின்னர் முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவ வேண்டும்.


  • முகத்தில் தடவிய அந்த பேக்கை 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரால் கழுவி விடவேண்டும். சோப் உபயோகப்படுத்தக் கூடாது.


  • சாதாரண தண்ணீரில் கழுவித் துடைத்தால் போதும்.


  • ஒருமுறை செய்த பின்பே நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.


  • இதனை வாரத்திற்கு  இரு முறை  செய்தாலே போதும்.  உங்கள் முகம்  தங்கம் போன்று மிகவும் அழகான பொலிவுப்பெறும்.





மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,







Post a Comment

0 Comments