கொரோனாவினால் ஒத்தி
வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
ஜூன் மாதம் நடக்க இருக்கும் நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் இணையத்தில்
இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு
தற்போது
அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாகவே
இந்தியா முழுவதும் கொரோனாவின் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில்,
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 1 முதல் 9-ம் வகுப்பு படிக்கு மாணவ,
மாணவிகள் தேர்வு எழுதமலே அடுத்த வகுப்பிற்கு செல்லலாம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சகம்
தெரிவித்த்து. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வு நடைப்பெறும்
என்று அறிவித்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், செய்தியாளர்
சந்திப்பில் வரும் ஜூன் 4-ம்
தேதி தேர்வு அன்று
10-ம் வகுப்பு மாணவர்களான பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்து இருந்தார். அரசின் முடிவுக்கு
பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன்
தேர்வுகள் நடத்தப்படும் என அரசு உறுதி
அளித்துள்ளது.
இந்நிலையில், வெளியூரில்
தங்கியுள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள்
தேர்வு மையங்களுக்கு வந்து பொதுத்தேர்வு எழுத
இ-பாஸ் வழங்கப்படும்
என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து வெளி
மாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில்
தங்கிப் படித்து வரும் மாணவர்களை
3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர
ஏற்பாடு செய்யப்படும் எனவும், அவர்களுக்கு உணவு வசதியும் செய்து
தரப்படும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும்
அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் அரசு வெளியிட்டுள்ளது.
https://tnepass.tnega.org/#/user/pass
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்
பொதுத்தேர்வுகான இ-பாஸ் பெறலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!
0 Comments