முக்கிய அறிவிப்பு - ஜூன் 30 வரை அனைத்து ரெயில்களும் ரத்து

              

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து விதமான பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்உ இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவில்  கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூன்று கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.  இந்த நிலையில், ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன


இதற்கு முன்னர், ரெயில்  அமைச்சகம் ரயில் சேவைகளை மீண்டும் துவங்க முடிவு  செய்து இருந்த்து.  அதவாது, ஜூன் 12 முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்து. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டு இருக்கும் வேளையில் தற்போது இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம்தெரிவித்துள்ளது.

 

இது குறித்து, தமிழக முதலமைச்சரும்  கருத்தை ஒன்றை  முன்வைத்துள்ளார், அதில் ரயில் மற்றும் விமான சேவையை தொடங்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். அதனை ஏற்ற மத்திய அரசு  தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ரயில் போக்குவரத்து கிடையாது  என்றும் அறிவிக்கப்பட்டது.  ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட 2 ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டது.

 

இதற்கிடையில், ஜூன் 30ம் தேதி வரையில் உள்ள அட்டவணைப்படி ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ள அனைத்து   நபருக்கும் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, கட்டணத்தை திருப்பி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

ரயில்வே வாரியம் சுற்றறிக்கை:



இந்த அறிவிப்பில், அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து ரயில்களும், அதவாது எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.  மேலும், ஜூன் 30ம் தேதி வரையில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் செயல்முறை தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, முழு கட்டணமும் திருப்பித் தரப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் சிறப்பு ரயில்களுக்கு விதிவிலக்கு என கூறப்பட்டுள்ளது.

 

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,



Post a Comment

0 Comments