தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! 18-ம் தேதிக்கு மேல் இயங்கும் அரசு பஸ்கள்!

 


 

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கத்தின் ஏழை மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளாதரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மே-18 க்கு மேல், ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயங்க தயாராக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை  ஒன்றை அனுப்பி உள்ளார். 


உலகம் முழுவதும் கொரோனாவின் கொரோதாண்டவம் அதிகரித்து கொண்டு இருக்க, இந்தியா முழுவதும் மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ்-ரெயில், விமான சேவைகள் போன்ற பொது சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதில் சிறப்பு விமானங்கள் மற்றும் முக்கிய அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட பஸ்-ரெயில்கள் போக்குவரத்துக்கு மட்டும்  விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு முடிந்த மே - 17 பிறகு பஸ்களை இயக்க போக்கு வரத்து கழகங்கள் தயாராக இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பற்றி  தமிழக போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளார்.


ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் தமிழகத்தில்  அரசு பேருந்துகளை இயங்க தயாராக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலும், பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுனர், நடத்துனர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பயணிகள் இருக்கையில் அமர மார்க் செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு தான் பேருந்த்தை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.

இன்னும் பொதுமக்களுக்கும் அல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதில் பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும். என்றும் தெரிவித்துள்ளர்.


பேருந்தின் பயணத்தின் போது கட்டணங்களை கூகுல்பே, -பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்துவது நன்று என்றும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களும் இதை கவனமுடன் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். சுற்றறிக்கையில் போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.


ஊரடங்கு முடிந்த பிறகு கொரோனா பாதிக்காத பகுதிகளில் முதலில் பேருந்துகள் இயக்க அனுமதிப்பார்கள்.  அதே போல் வருகிற 18-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடும் என்று தெரிகிறது. அரசு 25 நிபந்தனைகளை கடைபிடிக்குமாறு போக்குவரத்து துறைக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது. முக்கியமாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள்  இயங்கவில்லை. குறிப்பாக கொரோனா தொற்று பரவியுள்ள பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,









எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?





 

Post a Comment

0 Comments