நாம் முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலும் ஒரு அறிவியல் உண்மை இருகின்றது. அப்படி தான் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் அறிவியல் உண்மை இருகின்றது. அதனை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்தியாவில் குறிப்பாக தென்ந்தியாவில் பெண்கள் நெற்றியில் வைக்க கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
நெற்றியில் செந்தூரம்
வைப்பத்தின்
அறிவியல்
உண்மை:
நெற்றில் குங்குமம் வைப்பது மூலம், உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்ப உதவுகிறது. இது ஒரு மறைமுகமான யோகாவாகும். நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால், நெற்றியில் மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக உள்ளது.
சந்தனம் இடுவதால் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதன் மூலம், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.பெண்களால் தலை வகிடு, நடு நெற்றி, மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் வைத்து கொள்கிறார்கள். ஆண்கள் புருவ மத்தியில் குங்குமம் வைப்பது வழக்கம்.
1 Comments