இத்தாலி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறி உள்ளனர். மேலும், இந்த கொரோனா தடுப்பூசி எலிக்கு செலுத்தி அதில் வெற்றியும் பெற்றத்தாக தெரிவித்துள்ளனர்.
மனித குலத்தையை ஆட்டி படிக்கும் கொரோனா என்ற கொடூரமான
வைரஸ்யை ஒழித்து கட்டும் நோக்கில் ஒவ்வொரு நாடும் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு
வருகின்றது. அதில சில நாடுகள் பல தடுப்பு ஊசிகளை தயாரித்து சோதனை கட்டத்தில் உள்ளனர்.
ஆனால் இதுவரைக்கும் கொரோனாவுக்கு
எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக
உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்து
தொடர்பாக உலக சுகாதார அமைப்பும்
அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை தயாரிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு கூறியிருப்பதாக பல்வேறு நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் அவர்கள் சோதனை கட்டத்தையும் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்.
இத்தாலில் அமைந்துள்ள டாகிஸ்
நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள
கொரோனா தடுப்பூசி,
ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி
மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
இந்த
தடுப்பூசி முதலில் எலிக்கு செலுத்தப்பட்டு
சோதனை
செய்தனர். ஒரு
ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள்
உருவாகி உள்ளன. மனித உடலிலும்
வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும், அந்த
கொரோனா தடுப்பூசியை பரிசோதித்தபோது,
இது மனித அணுக்களில் உள்ள
வைரஸை அழித்ததும் கண்டு அறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால்
கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே
இதுதான் முதல் முறை என்று
டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக
அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி
நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இத்தாலில் பல ஆய்வுகளில் நடைபெற்ற
ஆராய்ச்சியில், இது மிகவும்
முன்னேறிய கட்டம் என்று கூறிய
அவர், கோடை காலத்தில் மனிதர்களுக்கு
இந்த மருந்தை செலுத்தும் முழுமையான
ஆராய்ச்சி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி
குறித்து , எதிர்காலத்தில் இதனை விரைவுபடுத்துவதற்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும்
அவர் செய்தியாளர்
சந்த்திப்பில் தெரிவித்துள்ளார்.
எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?
0 Comments