ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அறிவித்துள்ளார்.
ஆந்திர
மாநிலம் விசாகப்பட்டினம் அருகே அமைந்துள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம்
கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற
ரசாயன தொழிற்சாலை உள்ளது. அங்கு இருந்த ஆலையில்
திடீரென
இன்று ரசாயன வாயு கசிந்து வெளியேறி
உள்ளது. அதுவும் அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறியதால், ஆலைக்கு வெளியே பல
மீட்டர் தொலைவுக்கு பரவியது.
காற்றில் கலந்த ரசாயன இந்த நச்சு வாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி அங்கே அங்கே விழுந்தனர். பின்னர் தகவல் அறிந்து, ரசாயன வாயுவை சுவாசித்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த விபத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் மரணம் அடைந்தனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக என்பது குறிப்பிடத்தக்கது.
ரசாயன விபத்து குறித்து அறிந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உடனடியாக விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். சிகிச்சை பெறுவோருக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொரோனா
தொற்று உள்ளதால், வாயு கசிவு
ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில்
வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி
அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும்படி
அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?
0 Comments