தமிழகத்தில் ஊரடங்கு
தளர்வுகள் பற்றி தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார். அதில் சேலம், கோவை, சேலம், திருப்பூர்
உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இ பாஸ் இல்லாமல்
போக்குவரத்து இயக்கம். சென்னை நீங்கலாக மற்ற
மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் தொழிற்சாலைகள்
இயங்கலாம். கல்வி நிலையங்கள் மே
31 வரை மூடல். 25 மாவட்டங்களில் அத்தியாவசிய போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி.
20 பேருடன்
பேருந்துகள், 7 பேருடன் வேன்கள், கார்களில்
2 பேர் பயணம் செய்யலாம்.வாடகை டாக்ஸிகளை
அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம் (25 மாவட்டங்களில்). 25 மாவட்டங்களில் 100 சதவீத
பணியாட்களுடன் 100 நாள் வேலை திட்டம்
செயல்படுத்தலாம்
25 மாவட்டங்களில்
கூடுதல்
தளர்வு.
கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர்,
நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி,
தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை,
விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சை,
நாகை, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி
”சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் இல்லை”
விழுப்புரம்,
கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, அரியலூர்,
பெரம்பலூர் மாவட்டங்களுக்கும் புதிய தளர்வுகள் பொருந்தாது
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
புதிய தளர்வுகள்:
மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய ஊரக வேலை உறுதி
அளிப்பு திட்டம் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத
பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.
சிறப்பு திவால் சட்டம் - அனைத்து துறைகளும் தனியார் மயம் நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்? நாளைய அறிவிப்பு என்ன?
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ; இ-பாஸ் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!
0 Comments