இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை விட அதனை உறுதி செய்யும் முறை சவாலா உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய கருவியை குறைந்த செலவில் வருவாக்கியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தினை ஒழிக்க பல முன்னெச்சரிகை நடவடிகைகள் இந்திய அரசு எடுத்து வருகின்றது. அதுவும் குறிப்பாக கொரோனா பரிசோதனைஅதிகரித்து, நோயாளிகளை அடையாளம் கண்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். என்ற சூழ்நிலையில் இந்தியா உள்ளது.
இதனால்
அதிக அளவிலான சோதனைக் கருவிகள்
நமக்கு
தேவைப்படுகின்றன. இந்த தேவையினால்
வெளிநாடுகளில் இருந்து அதிக
செலவில் கருவிகள் வாங்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில்
அமைந்துள்ள தெற்கு 24 பர்கானாஸ்
மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சி.சி பயோடெக்
இந்தியா என்ற தனியார்
நிறுவனம்
கொரோனா சோதனை கருவியை கண்டு பிடித்து உள்ளது. அந்த சோதனை கருவின் விலை
ரூ .500 மட்டுமே.
இந்த சோதனை கருவி குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.மஜும்தார் தெரிவிப்பது என்னவென்றால் இரண்டு மாத கால ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்குப் பிறகு தான் இந்த கிட்டை தாயரித்துள்ளனர். மேலும்,1 கோடி சோதனை கருவிகளை உருவாக்கி உள்ளனர் அதில் 40 லட்சம் இருப்பில் உள்ளது. இந்த கருவியை கொண்உ அரசாங்கம் ஒரு நாளைக்கு 3 லட்சம் சோதனைகளை செய்ய இயலும், அதற்கு ஏற்ப, அந்த நிறுவனம் எந்த பிரச்சனையும் இல்லாமல் கிட்டுகளை வழங்கி ஆதரவு அளித்து வருகின்றது.
கடந்த
1ம் தேதி
அன்று இந்த கிட்டை தயாரிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
சென்னையில் 18- தேதி முதல் 25 பணியக்ளுடன் பஸ்கள் இயங்க அனுமதி!
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! 34 வகையான கடைகளை திறக்க அரசு அனுமதி!
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! டீக்கடைகள், தனிக்கடைகள் திறக்க அனுமதி!
0 Comments