மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செதியாளர் சந்திப்பில் பல அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இன்று ஒன்பது விதமான நடவடிக்கைகள் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல முன்னெச்சரிக்கை நடவடிகைகள் மத்திய அரசு எடுத்து வருகின்றது. நேற்று பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில், மத்திய நிதி அமைச்சர் அவர்கள் பல அறிவிப்புகளை வெயிட்டு உள்ளார். அதில் இடம் அறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- புலம்பெயர் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், சிறு விவசாயிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
- ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து இடம்பெறும்
- பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு போன்றவையும் இந்த அறிவிப்பில் இடம் பெற உள்ளது
- நேரடியாக பயனளிக்கும் வகையில் 3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது
- கடந்த 2 மாதத்தில் 25 லட்சம் புதிய கிசான் கிரடிட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளன.
- கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தின் படி சுமார் 3 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்
- மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் 86,600 கோடி ரூபாய் வரை வேளாண்மை கடன் வழங்கப்பட்டுள்ளது
- கடந்த 2 மாதத்தில் 25 லட்சம் புதிய கிசான் கிரடிட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளன
- கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் விவசாயக் கடன் அட்டைகளை அளித்துள்ளோம்.
- அவர்களுக்கு 25 ஆயிரம் கோடி அளித்துள்ளோம், விவசாயிகளை மறந்துவிடவில்லை - மத்திய நிதி அமைச்சர்
- நபார்டு உள்ளிட்ட வங்கிகள் மூலமாக விவசாயத்துறைக்கு கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
- ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது
- ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது
- 3 கோடி விவசாயிகள் கடன்களுக்கு தவணை செலுத்துவதிலிருந்து 3 மாத விலக்கு பெற்றனர்
- மார்ச்-1 முதல் ஏப்ரல் 30 வரை ரூ.86600 கோடி மதிப்பில் 63 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன
- மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11002 கோடியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.
- நகர்புறத்தில் வீடில்லாத ஏழைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு மார்ச் 28 முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது.
- சிறு விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி
- வட்டி தள்ளுபடியால் 3 கோடி விவசாயிகளுக்கு பயன்; 25 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள்
- கிசான் கிரெடிட் அட்டைகள் மூலம் ரூ25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
- விவசாயிகளுக்கு ரூ86,000 கோடி கடன் கடந்த 2 மாதங்களில் வழங்கப்பட்டுவிட்டது- நிர்மலா சீதாராமன்
- நகர்ப்புற ஏழைகளுக்கு 3 நேர உணவு வழங்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது
- முக கவசங்கள், சானிடைசர்களை 12,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்குகின்றன
- பேரிடர் நிதியை இடம்பெயர் தொழிலாளர்கள் முகாம்கள் அமைக்க பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
இரவு, பகல் பாராமல் உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாத அழுத்த சிகிச்சை கொடுக்கும் தன்னார்வலர்!
0 Comments