நேற்று
ஜெர்மனியில் நடந்த ஜி7
உச்சிமநாட்டில் நமது
பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சிறப்பு
அழைப்பாளராக பங்கேற்றுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மோடியை நோக்கி நடந்து வந்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
உலகின்
மிகப்பெரிய நாடான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி7
கூட்டமைப்பாக உள்ளன. இதில் பொருளாதார ரீதியாக வளர்ந்து நாடுகளான இந்த நாட்டின் தலைவர்கள்
ஆண்டு தோறும் உச்சிமாநாடு நடத்தி வருகின்றனர்.
இந்த
ஆண்டு ஜி7 உச்சிமாநாடு ஜெர்மனியில்
நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதனையடுத்து நமது பிரதமர் அங்கு
சென்றுள்ளார்.
இந்நிலையில்,
அந்த மாநாட்டில் அமெரிக்கா வல்லரசு நாடாக இருக்கும் நிலையில், அதிபர் ஜோபைடனே தானாக சென்று பிரதமர் நரேந்திர மோடியின் தோளை தட்டி கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தது பெருமையாக பார்க்கப்படுகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ
சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!
0 Comments