நம்ம
சிறு வயதில் விளையாடாக பயன்படுத்திய தாவரத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியம் அடைவீர்கள்.
இதை மட்டும் செய்தால் போதும் தொட்டா சிணுங்கி மூலிகையாக மாறிவிடும். இந்த இலையை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். நமது உடலும் குளிர்ச்சியாகும். வயிற்றில் புண்ணும் ஆறும்.
மனித
உடலில் ஏற்படும் கை, கால், மூட்டு
வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்புகள் போன்ற
நோய்கள் குணமாக தொட்டால்
சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால்
உடனே குணமாகும்.
குழிப்புண்
குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணில் படுமாறு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து
தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண்
குணமாகும்.
பெண்களுக்கு
மாதவிடாயின்போது
ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, 4 தேக்கரண்டி
சாற்றுடன், தேன் கலந்து மூன்று
வேளையும் குடிக்க வேண்டும் இல்லை ஒரு கைப்பிடி அளவு
இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால் உடனே குணமாகும்.
உடலில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.
பெண்களுக்கு மட்டும் இல்லமால் ஆண்களுக்கும் பல நன்மைகளை தொட்டா
சிணுங்கி நன்மையை பல தருகிறது. அதிலும்
குறிப்பாக இதன் இலையை அரைத்து
5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட
வேண்டும். இப்படி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். சிறுநீர் பிரச்சணையும்
குணமாகும்.
0 Comments