நமது
மனித இனத்தில் கடவுள் சொன்ன நீதி என்னவென்றால் இரவினில்
ஆட்டம் பகலினில் தூக்கம் என்று உலகம் சுற்றி கொண்டு இருக்கிறது. ஆனால் இன்று அதற்கு மாறாக தான்
இயங்கி கொண்டு இருக்கிறது. இப்போது கிராமங்களில், கூட இப்படியான கலாசார
மாற்றம் தலைதூக்க துவங்கியுள்ளது.
முன்பு
எல்லாம் இரவில் இனிய கனவுகள் காண
தூங்கும் நிலை போய் கனவுகள்
நிறைவேறாமல் தூங்கா நிலையில் இப்போது பலரும் தவித்து வருகின்றனர்.ஒரு நாளைக்கு 24 மணி
நேரம், என்றால் அதில் மூன்றில், ஒரு பங்கை தூக்கத்திற்கு
ஒதுக்க வேண்டும். இல்லை குறைந்தபட்சம் ஏழு, மணி நேரமாவது
தூங்க வேண்டும்.
மின்சாரம்,
இல்லாத போது சூரியனோடு வாழ்வியலை
அமைத்திருந்தோம். ஆனால் இப்போது இரவு 10, 11 ஏன் நள்ளிரவு தாண்டியும்,
சிலர் தூங்காமல் டிவி மொபைல் அவுட்டிங்
என பொழுதை கழிக்கின்றனர். இந்தியாவில் 30% மக்கள் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை, பிரச்னையால் அவதிப்படுவதாக மருத்துவ ஆய்வுகள், தெரிவிக்கின்றன. கொரோனாவுக்குப் பிறகு 10 பேரில் 3 பேருக்கு இந்தநிலை உள்ளது.
0 Comments