காலையில்
எழும்பியவுடன் அனைவரும்
வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன்பு
தண்ணீர் குடிக்க வேண்டும் அது மிகவும் நமது உடலுக்கு நல்லதாகும். அதுவும் எழுந்தவுடன் வெறும்
வயிற்றில் 2 ட்ம்பளர் அல்லது 200மில்லி தண்ணீரை குடிக்க
வேண்டும்.
ஆனால், சில பேர் காலையில் எழுந்து பல் தேய்த்த பிறகே தண்ணீர் குடிப்பார்கள். அப்படி செய்வது மிகவும் தவறாகும். பல் துலக்கும் முன் தண்ணீரை குடிக்க வேண்டும். வாயை சிறிது கொப்பளித்து துப்பி விட்டு 200மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் 200மில்லி நீர் பருக வேண்டும். பிறகு 45 நிமிடங்களுக்கு நாம் வேறு ஏதாவது குடிக்கவோ சாப்ப்பிடவோ கூடாது. நம்மில் சிலருக்கு பச்சை தண்ணீர் குடிப்பது நல்லதா அல்ல வெந்நீர் அருந்துவது நல்லதா என்ற சந்தேகம் தான் வாங்க பார்க்கலாம். எவை அறிந்தினால் நன்மை என்பதை.
சாதாரண
குளிரந்த நீர் உடலுக்கும் ஊக்கத்திற்கும்
சரியானதாகும் .சுடுநீர் ஔடத முறைமைகளின் தேவைக்கு
மட்டுமே.
நமது உடல் நிலையைவிட அதிகப்படியான
வெப்பமுள்ள நீரும், அதிகப்படியான குளிர்ச்சியான
உறைந்த நீரும் உடலுக்கு பயன்ற்றது
மட்டுமின்றி பாதகமானதும்கூட...நல்ல தண்ணீர் வேண்டுமென
கோதிக்கவைத்து குடிப்பது தவறாகும்.
அவற்றிக்கு சிறந்த வழி:
ஒரு மண்பானையில் வெட்டிவேர் தேற்றான்கொட்டை ஏலக்காய் கிராம்பு இவைகளை 5-6 எண்ணிக்கையில் ஓரிரண்டாக இடித்து ஒரு மெல்லிய
துணியில் முடித்து பானையில் போட்டு வைத்து குடிக்கும்
நீரானது உடலுக்கு உயிரூட்டமும் பாதுகாப்பரணாகவும் அமைந்திடும்
இக்குடிநீரை
நிறைவாக நாள்தோறும் குடித்துவரும் சூழலில் உடலில் எத்தகைய
தீங்கும் உண்டாகாது. மேலும், நோய்த்தடுப்பாற்றல் அரணாக அமைந்து காத்திடும்
0 Comments