சிலருக்கு
தூக்கமின்மை
பொதுவான உடல்நல பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒரு மனிதனுக்கு தூக்கம்
என்பது மிக முக்கிய விஷியம்.
ஏன் என்றால் இன்று பல நோய்களுக்கு முக்கிய
அறிகுறி தூக்கமினமை தான் அதனால்
குறைந்தது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம் என்று பல மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
அதே
சமயத்தில், மனிதர்கள் அதிக நேரம் தூங்குவதும்
மிகவும் தவறான பழங்களில் ஒன்றாகும். காரணம் நிறைய பேர்வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட கூடுதலான தூங்குவார்கள். அதேபோன்று தினமும் அதிக நேரம் தூங்குவது
மருத்துவ ரீதியாக ஆபத்தானது என்று பல ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.
ஒரு மனிதன்
சராசரியாக தினமும் 6 - 8 மணி
நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது,
8 மணி நேரத்திற்கும் மேலாக,
தூங்குபவர்களுக்கு பக்க வாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளார்கள்.
உடல் உழைப்பு
இல்லாத வாழ்க்கை, முறை காரணமாக 25வயதிற்குட்பட்டவர்கள்
இதய செயலிழப்பு, ப க்கவாதத்தை எதிர்கொண்டு இறக்கிறார்கள்.
ஒரு ஆய்வின்
படி, இரவில் 8 மணி நேரத்திற்கும்
குறைவாக தூங்குபவர்களை விட, 9 மணி
நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 23 % அதிகம் என்று கூறுகிறார்கள்.
மேலும், பகலில் 30 நிமிடங்களுக்கு குறைவாக தூங்குபவர்களை விட, 90 நிமிடங்கள் தூங்கு பவர்களுக்கு ப க்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 25 % அதிகம். நீண்ட நேரம் தூங்குபவர்கள் ,தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 82 % அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அதிகப் படியான தூக்கத்திற்கும், பக்கவாதத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை. அதிகமாக தூங்குபவர்களுக்கு கொழுப்பு அளவு அதிகரிக்கும்.
கொழுப்பு அதிகமானால்,
எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி. பக்கவாதம் ஏற்படுதவறகான வாய்ப்பும் இருக்கிறது. ஆரோக்கியமான உணவுப்பழக்கம் , வாழ்க்கை முறையை
பின்பற்றுவதன் மூலம் பக்கவாத அபாயத்தை 80 % தவிர்த்துவிடலாம் என்று
மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை இவை மூன்றையும்
கண்காணிக்க வேண்டியது அவசியம்.
தினமும் காலையில் மலச்சிக்கலில் அவதியுறுபவரா நீங்கள்? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
உப்பு ரொம்ப தப்பு!! உப்பில் இருக்கும் ஆபத்து என்னவென்று தெரியுமா?
அளவுக்கு மீறி தர்பூசணியை சாப்பிட்டால் நமது உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
தினமும் நீரில் ஊறிய வெண்டைக்காயை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
இது மட்டும் தெரிந்தால்! வெங்காய தோலை கீழே போடவிடமாட்டீர்கள்!! என்ன ஒரு அற்புதம்!!
தூக்கமின்மை தான் பல நோய்களுக்கான அறிகுறி!! எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம்.!!
0 Comments